ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !


கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !!!!

வணக்கம் நண்பர்களே !
                                                
 நம்ம (கி)ராமராஜன் அண்ணன்,  ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க  Shocking ஆ  இருக்கா ! எனக்கும்தான்!  கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும்  இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது  கரகாட்டக்காரன்  படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !

             
 காட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு   ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி

 ச.சுந்தரம் :  Dear All,  Well performance  done by Mr. Muthaiyan ! இந்த மாலைய  உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் ! தம்பி!  நல்லா ஆடுனீங்க  தம்பி  well done !
 I have not seen ever such a dance like this ! super  தம்பி ! வெளியூர் ஆட்டகாரன  உள்ளூர்  ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை ! 

ராமராஜன் :  தேங்க்ஸ்

அவர் சென்ற உடன்  தர்மகர்த்தா சந்தான பாரதி  ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .


சந்திர சேகர் : Sir  ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I didn't expect from you !

கனகா : uncle leave it !  He is always doing like this !

சந்தான பாரதி: you  two  people are making problem !get lost !

கனகா  (ராமராஜனை  பார்த்து ):Hey Man ! Can you  come for competition  with me ?

ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி ! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்

கனகா : எங்க வேணாலும் ! எப்ப வேணாலும்

ராமராஜன் : அப்ப ready ங்குற !

கனகா: Yes ! what you told ,You're going to break my knee?  Let see !

 ------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து சாப்பிட போகும் காட்சி

 கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?

ராமராஜன் : ஆமாண்ணே ! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !

ச.சுந்தரம் : அடேடே! வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !

உள்ளே வந்தபின்

ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks !


ராமராஜன்: no thanks !

 கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல ! நீங்க  எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச !மோர் சொல்லுங்க !

ச.சுந்தரம் :  எம்மா  காமாட்சி  தம்பிக்கு  மோர்  கொண்டு வா !

கனகா  மோர் கொண்டுவைக்கிறார் !

அப்போது ராமராஜன் கனகாவிடம் :  I am crazy about you !

 ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely sorry  for the incident happened on that day night . I don't like competition !


ராமராஜன்: Sorry ! i am not responsible for that  uncle !

 ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல !  ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?

கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட !

 ராமராஜன்:  அண்ணே ! Stop  funny ! actually my father was a great dancer ! he got so many medals ! also he got medal from MGR . After his death , My mother trained me !she is also a good dancer ! எனக்கு எல்லாமே அம்மாதான்!  நீங்க கூட பார்த்திருப்பீங்களே !

ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் போயிட்டு வர்றேன் !


அவர் போனவுடன் நம்ம  அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து  பாட்டு பாட  ஆரம்பிக்கிறாரு.  கீழே சொடுக்குங்க  அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு !


என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான்  எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே  பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு  எடுப்பார் !மறக்காம  கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால் ஓட்டு போட்டு  அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் !

நன்றியுடன்
இரா.மாடசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக